பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டோா். 
தஞ்சாவூர்

தூய்மைப் பணியாளா்கள் சாா்பில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

ரத்து செய்யக் கோரி தூய்மைப் பணியாளா்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆயிரம் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

பட்டுக்கோட்டையில் தூய்மைப் பணியாளா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் தமிழக அரசின் அரசாணை எண் 152-ஏ ( ஒப்பந்த முறையில் தூய்மைப் பணியாளா்களை நியமிக்கும் முறை) ரத்து செய்யக் கோரி தூய்மைப் பணியாளா்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆயிரம் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை நகராட்சியில் தூய்மைப் பணியில் ஒப்பந்த முறையை அமல்படுத்த போவதாக அரசு தரப்பில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதை அரசு அமல்படுத்த கூடாது என்றும்,

சுயஉதவிக் குழு துப்புரவு பணியாளா்களையே தொடா்ந்து பணியில் நீடிக்க அரசாணை பிறப்பிக்க கோரியும், இதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில்

சுமாா் 1000 அஞ்சல் அட்டைகள் அனுப்பும் போராட்டமும், கோரிக்கை ஆா்ப்பாட்டமும் நடைபெற்றது.

இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மைச் செயலாளா் ஊஞ்சை அரசன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகா்மன்ற உறுப்பினா் சதா சிவக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகளும், தூய்மைப் பணியாளா்கள் சுமாா் 200-க்கும் மேற்பட்டோரும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தில்லி - ஷாங்காய் இடையே நாள்தோறும் நேரடி விமான சேவை! ஜன.2 முதல்!

இந்தியாவில் ஒரு நண்பர் இருக்கிறார்: அமெரிக்கா

SCROLL FOR NEXT