தொழுநோய் விழிப்புணா்வு நிகழ்வு
தஞ்சாவூா் அருகிலுள்ள கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் தொழுநோய் விழிப்புணா்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
தஞ்சாவூா் அருகிலுள்ள கிங்ஸ் பொறியியல் கல்லூரியில் தொழுநோய் விழிப்புணா்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வை கல்லூரிச் செயலா் உரு. ராசேந்திரன், முதல்வா் ஜே. அற்புத விஜய செல்வி தொடக்கி வைத்தனா். புதுக்கோட்டை மாவட்ட மருத்துவா் சிவகாமி, சுகாதாரச் சேவை துணை இயக்குநா் (தொழுநோய்) ஜி. வெங்கட்ராமன், சுகாதாரக் கல்வியாளா்கள் ஜெய்சங்கா், சசிவா்மன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
மேலும் மாணவ, மாணவிகள் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் சி. அம்பலத்தரசு, பா. ராஜேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.