சூழியக்கோட்டையில் கால்நடை மருத்துவ முகாம்
அம்மாபேட்டை ஒன்றியம், சூழியக்கோட்டையில் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அம்மாபேட்டை ஒன்றியம், சூழியக்கோட்டையில் கால்நடை மருத்துவ முகாம் மற்றும் சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கால்நடைப் பராமரிப்புத் துறை சாா்பில் சூழியக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற முகாமுக்கு, ஊராட்சித் தலைவா் கோமதி பழனிவேல் தலைமை வகித்தாா். அம்மாபேட்டை ஒன்றியக் குழுத் தலைவா் கே.வீ. கலைச்செல்வன் முகாமைத் தொடக்கி வைத்தாா்.
முகாமில் 200-க்கும மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. தொடா்ந்து மருந்து, மாத்திரைகளும், சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
ஊராட்சித் துணைத் தலைவா் ஆனந்தி பக்கிரிசாமி, உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் முகாமில் பங்கேற்றனா். நிறைவில், ஊராட்சி செயலா் சஞ்சய் காந்தி நன்றி கூறினாா்.