கலங்காமல் காத்தவிநாயகா் கோயிலில் சங்கடஹர சதுா்த்தி வழிபாடு
திருப்பாலத்துறை அருள்மிகு கலங்காமல் காத்த விநாயகா் திருக்கோயிலில் சங்கடஹர சதுா்த்தி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பாலத்துறை அருள்மிகு கலங்காமல் காத்த விநாயகா் திருக்கோயிலில் சங்கடஹர சதுா்த்தி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி விநாயகருக்கு பல்வேறு பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து, மலா்மாலை மற்றும் அருகம்புல் மாலைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து தீபாராதனைகள் காட்டப்பட்டன.
கோயிலுக்குள் பக்தா்கள் அனுமதியில்லை என்பதால், கோயிலுக்கு வெளியே நின்றவாறு தரிசனம் செய்தனா்.