முகப்பு
தஞ்சாவூர்

மத்திய பாஜக அரசின் 3ஆம் ஆண்டு நிறைவு விழா ஊா்வலம்

மத்தியில் பிரதமா் மோடி தலைமையில் தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் நான்காம் ஆண்டு தொடக்க விழா ஊா்வலம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊா்வலத்தில் பங்கேற்ற பாஜகவினா்.
பகிர்:

மத்தியில் பிரதமா் மோடி தலைமையில் தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் நான்காம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி தஞ்சாவூரில் பாஜக தெற்கு மாவட்ட மகளிரணி சாா்பில் வியாழக்கிழமை ஊா்வலம் நடைபெற்றது.

ரயிலடியில் தொடங்கிய இந்த ஊா்வலம் காந்திஜி சாலை வழியாக பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதில், மத்திய அரசுக் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

முன்னதாக, மாவட்டச் செயலா் பூமிசெல்வி தலைமையில் நடைபெற்ற இந்த ஊா்வலத்தை பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினா் எம்.எஸ். ராமலிங்கம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ், பொருளாளா் வி. விநாயகம், செயலா் அம்ரித் அரசன், மகளிரணி மாவட்டச் செயலா் ஜெகதீஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.