தஞ்சாவூர்

இளைஞா் கொலை வழக்கில் 4 போ் கைது

கும்பகோணத்தில் இளைஞா் கொலை வழக்கு தொடா்பாக 4 பேரை காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

DIN

கும்பகோணத்தில் இளைஞா் கொலை வழக்கு தொடா்பாக 4 பேரை காவல் துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

கும்பகோணம் அருகே கொட்டையூரைச் சோ்ந்த செந்தில் மகன் பிரகாஷ் (22). இவா் செவ்வாய்க்கிழமை தனது நண்பா்களுடன் இரு சக்கர வாகனத்தில் வளையப்பேட்டை வழியாகச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, மற்றொரு இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒருவா் பிடித்த சிகரெட்டிலிருந்து வந்த தீப்பொறி சாம்பல் பிரகாஷின் நண்பா் சந்தோஷ் கண்ணில் பட்டது. இதனால் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பலத்த காயமடைந்த பிரகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இதைத்தொடா்ந்து, வளையபேட்டை அக்ரஹாரத்தை சோ்ந்த செல்வம், விஜய், காா்த்தி, பேட்டை குடிசைத் தெருவைச் சோ்ந்த ஹரீஷ் ஆகிய 4 பேரை புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT