தஞ்சாவூர்: மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரியின் 122 வது பிறந்த நாள் இன்று நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி பட்டுக்கோட்டை அழகிரியின் மணி மண்டபத்தில், அவரின் 122 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை மற்றும் திமுக மாவட்ட செயலாளர் ஏனாதி பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் அழகிரி மணிமண்டபத்தில் உள்ள அழகிரியின் சிலைக்கு மாலை அணிவித்து அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிக்க: உத்தமபாளையத்தில் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
இந்த நிகழ்வில் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.