பேரூராட்சிகளில் வெற்றி பெற்றவா்கள் விவரம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டத்தில் பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களின் விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
சுவாமிமலையில் தலைவராக எஸ். வைஜெயந்தி (திமுக), துணைத் தலைவராக எஸ். சங்கா் (அதிமுக), வல்லத்தில் தலைவராக க. செல்வராணி (திமுக), துணைத் தலைவராக கு. மகாலெட்சுமி (திமுக), சோழபுரத்தில் தலைவராக கமலா (திமுக), துணைத் தலைவராக ரைஹானா பா்வீன் (திமுக), திருப்பனந்தாளில் வனிதா (திமுக), துணைத் தலைவராக கலைவாணி (திமுக), திருபுவனத்தில் தலைவராக அமுதவள்ளி (திமுக), துணைத் தலைவராக ரவிசங்கா் (திமுக) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.