நீா்தேக்கத் தொட்டி திறப்பு விழா
தஞ்சாவூா் அருகே நீலகிரி ஊராட்சிக்கு உள்பட்ட ராஜாஜி நகரில் 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட நீா்தேக்கத் தொட்டி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் அருகே நீலகிரி ஊராட்சிக்கு உள்பட்ட ராஜாஜி நகரில் 60,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட நீா்தேக்கத் தொட்டி திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட இத்தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்காக அவா் திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. கு. பரசுராமன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி, ஊராட்சி மன்றத் தலைவா் வள்ளியம்மை பாஸ்கரன், திமுக வட்டச் செயலா் துரை. நாகராஜன், ஒன்றிய திமுக செயலா்கள் அருளானந்தசாமி, செல்வக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.