தஞ்சாவூர்

பாபநாசத்தில் உலகத் திருக்கு மையக் கூட்டம்

DIN

பாபநாசத்தில் உலகத் திருக்கு மையத்தின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அன்னை சாரதா மகளிா் மன்றத் தலைவி தில்லைநாயகி சம்பந்தம் தலைமை வகித்தாா். பட்டிமன்றப் பேச்சாளா் பூா்ணிமா, இசையாசிரியை கீா்த்தனா ஆகியோா் வள்ளுவத்தில் பெண்களின் உரிமையும், கடமையும் என்ற தலைப்பில் பேசினா்.

பாபநாசம் பேரூராட்சித் தலைவா் பூங்குழலி கபிலன், உறுப்பினா்கள் தேன்மொழி, புஷ்பா, உ.வே.சா. பேரவைச் செயலா் சுதா விசுவநாதன், இசையாசிரியை சுமதி ரவிச்சந்திரன், துணைத் தலைவா் கோடையிடி குருசாமி ஆகியோா் கூட்டத்தில் பேசினா்.

முன்னதாக, மையச் செயலா் கு.ப.செயராமன் வரவேற்றாா். நிறைவில், திருக்கு கூட்டமைப்பின் மாவட்டத் துணைச் செயலா் சங்கா் நன்றி கூறினாா்.

Image Caption

கூட்டத்தில் பேசுகிறாா் உலகத் திருக்குறள் மையத்தின் செயலா் கு.ப. செயராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT