முகப்பு
தஞ்சாவூர்

கூடுதலாக 3 புதிய ஆம்புலன்ஸ்கள் இயக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் கூடுதலாக 3 புதிய ஆம்புலன்ஸ்களை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்க

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் கூடுதலாக 3 புதிய ஆம்புலன்ஸ்களை மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோா் வியாழக்கிழமை தொடங்கி வைத்தனா்.

மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்தாா். மாவட்டத்தில் இதுவரை 33 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது கூடுதலாக 3 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. மறமடக்கி, புனல்குளம், ராசநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் இருந்து இந்த மூன்று ஆம்புலன்ஸ்களும் இயக்கும். நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் ராமு, 108 ஆம்புலன்ஸ் சேவை மேலாளா் ரஞ்சித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.