தஞ்சாவூர்

மேக்கேதாட்டு அணை விவகாரம்: குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு

DIN

தஞ்சாவூர்: மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் தொடங்கிய இக்கூட்டத்தில், மேக்கேதாட்டு அணையைக் கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, கர்நாடக அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பியவாறு விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் ஆட்சியரக கட்டடம் முன் விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பி கர்நாடக அரசுக்கும், மத்திய அரசுக்கும் கண்டனம் தெரிவித்தனர்.

சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு விவசாயிகள் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT