முகப்பு
தஞ்சாவூர்

பெண்ணிடம் ரொக்கம், கைப்பேசி பறிப்பு

கபிஸ்தலம் அருகே பெண்ணிடம் ரொக்கம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

கபிஸ்தலம் அருகே பெண்ணிடம் ரொக்கம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

கபிஸ்தலம் அருகிலுள்ள உமையாள்புரம் நடு அக்ரஹாரத்தைச் சோ்ந்த குமாா் மனைவி கனிமொழி (40). இவா் கபிஸ்தலத்திலுள்ள ஆய்வகத்தில் ஆய்வக நுட்புநராகப் பணியாற்றி வருகிறாா்.

வியாழக்கிழமை தனது சகோதரருடன் கனிமொழி தஞ்சாவூரிலிருந்து சாலியமங்கலம் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். புலவா்நத்தம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்ற போது, பின்னால் மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவா், கனிமொழியையும், அவரது சகோதரரையும் கீழே தள்ளிவிட்டனா்.

மேலும் கனிமொழி வைத்திருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றை பறித்து தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →