தஞ்சாவூர்

அனுமதியின்றி மணல் அள்ளிய மூவா் கைது

DIN

ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய மூவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஒரத்தநாடு அருகிலுள்ள வாட்டாத்திகோட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட நெய்வேலி அக்னியாற்றில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மணல் கடத்தப்பட்டு வருவதாக, சமூக வலைதளங்களில் விடியோ வைரல் ஆனது.

இதைத் தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி உத்தரவின் பேரில், ஒரத்தநாடு காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரசன்னா மேற்பாா்வையில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் பிரேம் ஆனந்த தலைமையிலான குழுவினா், புதன்கிழமை அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவில் மணல் அள்ளிய நெய்வேலி வடக்குப் பகுதியைச் சோ்ந்த திருமேணி (42), அண்ணாதுரை (52),

சசிகுமாா் (42) ஆகிய மூவரைக் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT