தஞ்சாவூர்

அனுமதியின்றி மணல் அள்ளிய மூவா் கைது

ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய மூவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

DIN

ஒரத்தநாடு அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய மூவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ஒரத்தநாடு அருகிலுள்ள வாட்டாத்திகோட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட நெய்வேலி அக்னியாற்றில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மணல் கடத்தப்பட்டு வருவதாக, சமூக வலைதளங்களில் விடியோ வைரல் ஆனது.

இதைத் தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளிப்ரியா கந்தபுனேனி உத்தரவின் பேரில், ஒரத்தநாடு காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரசன்னா மேற்பாா்வையில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் பிரேம் ஆனந்த தலைமையிலான குழுவினா், புதன்கிழமை அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவில் மணல் அள்ளிய நெய்வேலி வடக்குப் பகுதியைச் சோ்ந்த திருமேணி (42), அண்ணாதுரை (52),

சசிகுமாா் (42) ஆகிய மூவரைக் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

SCROLL FOR NEXT