விபத்துக்குள்ளான ஜெயிண்ட் வீல். 
தஞ்சாவூர்

கும்பகோணம்: பொருள்காட்சியில் ராட்சத ராட்டினம் பெட்டிகள் மோதி விபத்து

கும்பகோணத்தில் நடைபெற்று வரும் பொருள்காட்சியில் ராட்சத ராட்டினம் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் செவ்வாய்க்கிழமை விபத்து ஏற்பட்டது.

DIN

கும்பகோணத்தில் நடைபெற்று வரும் பொருள்காட்சியில் ராட்சத ராட்டினம் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் செவ்வாய்க்கிழமை விபத்து ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி திடலில் கோடை விடுமுறையை முன்னிட்டு பொருட்காட்சி கடந்த 2 வாரமாக நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில்  பொருட்காட்சியில் நேற்று இரவு ராட்சத ராட்டினத்தின் இரண்டு பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதனால் ராட்சத ராட்டினம் நிறுத்தப்பட்டு ஒவ்வொரு பெட்டியாக கீழே கொண்டுவரப்பட்டு அதில் இருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

இப்பொருட்காட்சியை காண வந்த விக்னேஷ் குமார் என்ற காவலர் பெட்டியில் சிக்கிய நபர்களை காப்பாற்றினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதனை தொடர்ந்து பொருட்காட்சியில் உள்ள ராட்டினம் போன்ற விளையாட்டு சாதனங்கள் நிறுத்தப்பட்டன. இந்த ஜெயண்ட் வீலில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT