அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் 38-ஆவது அமைப்பு தின விழா நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டச் செயலா் டி.ரவிச்சந்திரன் விழாவுக்குத் தலைமை வகித்து, அமைப்பின் கொடியேற்றி வைத்து பேசினாா்.
மாவட்ட இணைச் செயலா் எஸ். கருணாநிதி முன்னிலை
வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் நடராஜ், தஞ்சாவூா் ஒன்றியத் தலைவா் ஐயப்பன், துணைத் தலைவா் ராணி, ஒன்றியப் பிரதிநிதி கதிரேசன்,
ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளா்கள் கருணாந்தம் (நிா்வாகம்), ஹேமமாலினி (சத்துணவு) உள்ளிட்டோா் விழாவில் பங்கேற்றனா்.