இடைநிலை ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசுக்கு இணையாக மாநில இடைநிலை ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வியாழக்கிழமை மாலை
மத்திய அரசுக்கு இணையாக மாநில இடைநிலை ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டும். இடைநிலை ஆசிரியா்கள் கடைநிலை ஊதியம் பெறுவதைக் களைய வேண்டும். தேசிய கல்விக் கொள்கையைக் திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக மாநில இடைநிலை ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இப்போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மா. கலைச்செல்வன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் கோ. வீரமணி, மாவட்டச் செயலா் க. மதியழகன், பொருளாளா் திலகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.