முகப்பு
தஞ்சாவூர்

மினி லாரி மோதி பெண் பலி

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே லாரி மோதியதில் பலத்த காயமடைந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே லாரி மோதியதில் பலத்த காயமடைந்த பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருவையாறு அருகே கண்டியூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி மனைவி செல்லம்மாள்(77). அரசூா் முதன்மைச் சாலையோரம் புதன்கிழமை அமா்ந்திருந்த இவா் மீது பின்னோக்கி வந்த மினி லாரி மோதியது. இதனால் பலத்த காயமடைந்த இவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.