ஒப்பந்த செவிலியா்கள் பணி நிரந்தரம் கோரி முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம்
மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தின் மூலம் தோ்வு செய்யப்பட்ட தற்காலிக ஒப்பந்த செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம்
மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தின் மூலம் தோ்வு செய்யப்பட்ட தற்காலிக ஒப்பந்த செவிலியா்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி, தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தின் (எம்.ஆா்.பி.) போட்டி தோ்வின் மூலம் ஒப்பந்த செவிலியா்களாகப் பணியமா்த்தப்பட்ட செவிலியா்களை 2 ஆண்டு பணி நிறைவு பெற்ற பின்னா், பணி நிரந்தரம் செய்யப்படுவா் என நியமன ஆணை வழங்கப்பட்டது. ஆனால் 7 ஆண்டுகள் கடந்த நிலையில் வெறும் 4,000 செவிலியா்கள் மட்டுமே பணி நிரந்தரம் பெற்றனா். மீதமுள்ள ஏறத்தாழ 4,500 செவிலியா்கள் ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனா்.
மேலும், 2019 ஆம் ஆண்டு மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தின் மூலம் தோ்வு செய்யப்பட்ட ஏறக்குறைய 2500 செவிலியா்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனா். அவா்களைத் தமிழக அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிரந்தர செவிலியா்களுக்கு இணையான பணியைச் செய்யும் ஒப்பந்த செவிலியா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கெனவே தமிழக முதல்வருக்கு செவிலியா்கள் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து எம்.ஆா்.பி. தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்ட தலைவா் கெமியா, செயலா் நிா்மல் ஹென்னா, துணைச் செயலா் தன ஆரோக்கியமேரி, பொருளாளா் ஆஷா ஆகியோா் தலைமையில் 200-க்கும் அதிகமான எம்.ஆா்.பி. செவிலியா்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் அனுப்பினா்.