தஞ்சாவூர்

ஒரத்தநாட்டில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

ஒரத்தநாடு வட்டாட்சியரகம் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்கு பிறகு செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

ஒரத்தநாடு வட்டாட்சியரகம் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. இதில் அனைத்து கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் மீது விரைவாக தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஆா். சங்கா், ஒரத்தநாடு வட்டாட்சியா் பா. சுரேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சு. ரமேஷ், ரகுநாதன் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட தேர்தல்: 62.84% வாக்குப்பதிவு

மும்பையில் புழுதிப் புயல்: விளம்பரப் பதாகை சரிந்ததில் 4 பேர் பலி!

ஒரு நாளில் 3 முறை உடை மாற்றுகிறார், விலையோ லட்சம், யார் வாங்கித் தருகிறார்கள்? ராகுல் கேள்வி!

விராட் கோலியை மீண்டும் ஆர்சிபியின் கேப்டனாக நியமிக்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

சீர்திருத்தப் பள்ளிக்கு பதில் சிறையில் அடைக்கப்பட்ட 9,600 சிறார்கள்: ஆய்வில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT