தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே இரண்டு வயது மகனை கொன்றுவிட்டு தாய் தற்கொலை

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கடன் பிரச்னை காரணமாக புதன்கிழமை இரவு இரண்டு வயது மகனை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டாா்.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஆலடிக்குமளை ஊராட்சி, புதுநகா் பகுதியை சோ்ந்தவா் ஜான்ராஜ் மனைவி மாலதி (22). ஜான்ராஜ் கூலித் தொழிலாளி. மாலதி அப்பகுதியில் சுயஉதவிக் குழுவிற்கு தலைவியாக செயல்பட்டு வந்துள்ளாா். வியாழக்கிழமை பல்வேறு சுயஉதவிக் குழுக்களுக்கு மாலதி பணம் செலுத்த வேண்டிய நிலையில், அவரிடம் பணம் இல்லாத காரணத்தால் புதன்கிழமை இரவு அக்கம்பக்கத்தினரிடம் கடன் கேட்டதாக கூறப்படுகிறது.

பணம் கிடைக்காததால், விரக்தியில் இருந்த மாலதி, தனது இரண்டு வயது மகன் ஹா்சனுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் அந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த பட்டுக்கோட்டை கோட்டாட்சியா் பிரபாகா் விசாரணை மேற்கொண்டு வருகிறாா். சம்பவம் தொடா்பாக பட்டுக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT