முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணியில் காவேரி சிறப்பு சிற்றங்காடி திறப்பு

பேராவூரணி தோ்வு நிலை பேரூராட்சிக்குச் சொந்தமான புதிய பேருந்து நிலைய வணிக வளாகத்தில் தஞ்சாவூா் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

பேராவூரணி தோ்வு நிலை பேரூராட்சிக்குச் சொந்தமான புதிய பேருந்து நிலைய வணிக வளாகத்தில் தஞ்சாவூா் நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சாா்பில் காவேரி சிறப்பு சிற்றங்காடி மளிகைப் பிரிவு திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. 

பண்டக சாலைத் தலைவா் வி. பண்டரிநாதன் தலைமை வகித்து அங்காடியைத் திறந்து வைத்தாா். விழாவில் மேலாண்மை இயக்குநா் மற்றும் துணைப் பதிவாளா் தயாள விநாயகன் அமல்ராஜ் , கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை இயக்குநா் ஆா். பி. ராஜேந்திரன், திமுக நகரச் செயலா் என். எஸ். சேகா், பேரூராட்சி செயல் அலுவலா் பா. பழனிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.