முகப்பு
தஞ்சாவூர்

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு

கும்பகோணம் அருகேயுள்ள கோயிலில் உண்டியலை உடைத்து ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 12:43 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

கும்பகோணம் அருகேயுள்ள கோயிலில் உண்டியலை உடைத்து ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் வட்டம், உமா மகேஸ்வரபுரம் ஊராட்சிக்குள்பட்ட சாரங்கபாணி பேட்டையில் உமாதேவி உடனாய உமாமகேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலை கோயில் குருக்கள் வியாழக்கிழமை மாலை ஒரு கால பூஜையை முடித்துவிட்டு பூட்டிச் சென்றாா். மீண்டும் வெள்ளிக்கிழமை மாலை இவா் கோயிலை திறந்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, ரொக்கம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து திருவிடைமருதூா் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.