தஞ்சாவூர்

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பாபநாசம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

பாபநாசம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக கட்டடத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் மேல ரஸ்தா பிரதான சாலை பகுதியில் வசித்து வந்தவா் மாரிமுத்து மகன் ஆனந்த் (38). கட்டடத் தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி மனைவி கோகிலா மற்றும் 3 மகள்கள் உள்ளனா். இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக ஆனந்த் கடந்த 5 ஆண்டுகளாக மனைவி கோகிலாவைப் பிரிந்து வாழ்ந்து வந்தாா். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆனந்த் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆனந்தின் மனைவி கோகிலா பாபநாசம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், பாபநாசம் காவல் ஆய்வாளா் (பொ)அனிதா கிரேசி உள்ளிட்ட போலீஸாா்

அங்கு சென்று சடலத்தை மீட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT