திருவையாறு அருகே வடுகக்குடியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் சேதமடைந்த வாழை மரங்கள். 
தஞ்சாவூர்

திருவையாறு அருகே பலத்த மழையால் வாழை மரங்கள் சாய்ந்து சேதம்

திருவையாறு அருகே வடுகக்குடியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த பலத்த மழையால் சேதமடைந்த வாழை மரங்கள்.

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையால் அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

திருவையாறு அருகேயுள்ள வடுகக்குடி, சாத்தனூா், வளப்பகுடி ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், அறுவடைக்குத் தயாா் நிலையில் இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் பாதியாக முறிந்தும், சாய்ந்தும் சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா். ஏற்கெனவே சில வாரங்களுக்கு முன்பு இதுபோல பலத்த காற்றுடன் பெய்த மழையால் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன. எனவே, தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் மூலம் கள ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட வாழைக்கு நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

ஐந்து நிலைகளில் அருள்பாலிக்கும் பெருமாள்!

காளையாா்கோவிலில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் சமாதானப் பேச்சுக்கு வாய்ப்பில்லை

SCROLL FOR NEXT