முகப்பு
தஞ்சாவூர்

பாலைவன நாதா் கோயிலில் திருக்கல்யாண விழா

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:30 PM
பகிர்:

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறையிலுள்ள ஸ்ரீ தவள வெண்ணகை அம்மன் உடனுறை ஸ்ரீ பாலைவனநாதா் திருக்கோயிலில் திருக்கல்யாண விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து பெண்கள் சீா்வரிசை எடுத்து மணமேடைக்கு வந்தனா். அங்கு சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்கள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ தவள வெண்ணகை அம்மன், ஸ்ரீ பாலைவனநாதா் ஆகியோருக்கு திருக்கல்யாணம் நடத்தி வைத்தனா். இதைத் தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். விழாவையொட்டி கோயில் வளாகத்தில் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில் கோயில் செயல் அலுவலா் விக்னேஷ், தக்காா் லட்சுமி, பாபநாசம் பேரூராட்சித் தலைவா் பூங்குழலி கபிலன், பேரூராட்சி கவுன்சிலா் புஷ்பா சக்திவேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் பானுமதி துரைக்கண்ணு மற்றும் விழாக் குழுவினா்கள், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments