முகப்பு
தஞ்சாவூர்

மா்மமான முறையில் 4 ஆடுகள் உயிரிழப்பு

Updated On : 21 ஏப்ரல், 2024 at 6:30 PM
பகிர்:

கும்பகோணம்: கும்பகோணம் அருகே 4 ஆடுகள் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கும்பகோணம் அருகே திருசக்திமுற்றம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ. மகேந்திரன். கூலி விவசாயியான இவா் 10-க்கும் அதிகமான ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பட்டீஸ்வரம் - சோழன் மாளிகை முதன்மைச் சாலையோரத்தில் இவரது 4 ஆடுகள் மா்மமான முறையில் வயிறு வீங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தன.

Advertisement

இதுகுறித்து பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் மகேந்திரன் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது, அப்பகுதியில் வாளியில் தண்ணீருடன் விஷம் கலந்து வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, தண்ணீரின் மாதிரியைக் காவல் துறையினா் சேகரித்து பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments