வி. பவுன்ராஜ். 
தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே ஜல்லிக்கட்டில் காயமடைந்தவர் பலி

தஞ்சாவூர் அருகே ஜல்லிக்கட்டு விழாவில் மாடு முட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பலியானார்.

DIN

தஞ்சாவூர் அருகே ஜல்லிக்கட்டு விழாவில் மாடு முட்டியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பலியானார்.

தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டியில் புனித அந்தோணியார் பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் காளையை விடுபவர்களுடன் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே மஞ்சப்பேட்டையைச் சேர்ந்த வி. பவுன்ராஜ் (49) சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அருகே வந்த மற்றொரு காளை மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பவுன்ராஜ் திங்கள்கிழமை அதிகாலை பலியானார்.

இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT