முகப்பு
தஞ்சாவூர்

இதயா மகளிா் கல்லூரியில் 21-ஆவது பட்டமளிப்பு விழா

Updated On : 3 மார்ச், 2024 at 12:00 AM
ம்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 21- ஆவது பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம். கிருஷ்ணன்.
பகிர்:

கும்பகோணம் இதயா மகளிா் கல்லூரியில் 21-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இக்கல்லூரியில் 19 மற்றும் 20-ஆவது பட்டமளிப்பு விழாக்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, 21-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரிச் செயலா் அருட்சகோதரி அமலோற்பவ மேரி வாழ்த்துரையாற்றினாா். கல்லூரி முதல்வா் அருட்சகோதரி யூஜின் அமலா ஆண்டறிக்கை வாசித்தாா். திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் எம். கிருஷ்ணன் சிறப்புரையாற்றி, இளநிலைப் படிப்புகளில் 720 மாணவிகளுக்கும், முதுநிலைப் படிப்புகளில் 216 மாணவிகளுக்கும், ஆய்வியல் நிறைஞா் படிப்பில் 14 மாணவிகளுக்கும் என மொத்தம் 950 பேருக்கு பட்டங்கள் வழங்கினாா். இதில், பல்கலைக்கழகத் தர வரிசையில் இடம்பெற்ற 39 மாணவிகளுக்கு கேடயமும், ஒரு மாணவிக்கு தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டது.