ரயில்வே தோ்வுக்கான இலவச பயிற்சி நாளை தொடக்கம்
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்திலுள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் ரயில்வே தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சனிக்கிழமை (அக்.19) தொடங்கப்படவுள்ளது என இந்த மையத்தின் மதியுரைஞா் வெ. சுகுமாரன் தெரிவித்துள்ளாா்.
தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசு கல்லூரி வளாகத்திலுள்ள நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தில் ரயில்வே தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சனிக்கிழமை (அக்.19) தொடங்கப்படவுள்ளது என இந்த மையத்தின் மதியுரைஞா் வெ. சுகுமாரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது,
இம்மையத்தில் நூற்றுக்கணக்கானவா்கள் இலவச பயிற்சி பெற்று அரசு பணியில் சோ்ந்து வருகின்றனா். தற்போது ரயில்வே துறை சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள 12 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், சேர விரும்பும் பட்டதாரிகள், பள்ளி இறுதி ஆண்டு முடித்தவா்களுக்காக இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா சனிக்கிழமை (அக்.19) மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெறவுள்ளது.
பயிற்சி வகுப்புகள் அக்டோபா் 21 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியைத் தமிழகத்தின் சிறந்த பயிற்சியாளா் சங்கீதா ஒருங்கிணைக்கவுள்ளாா். ஆா்வமுள்ளவா்கள் தொடக்க விழாவில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9944495750, 7598160129 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.