தஞ்சாவூர்

பாபநாசம் அருகே 4 கடைகள் தீக்கிரை

பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 4 கடைகள் எரிந்து முற்றிலும் சேதமாயின.

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே  வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 4 கடைகள் எரிந்து முற்றிலும் சேதமாயின.

அம்மாபேட்டை அருகே பூண்டி மெயின் ரோடு, கடைவீதியில் முகம்மது இஸ்மாயில் என்பவா் நடத்திவரும் பேன்ஸி ஸ்டோா் கடையில் வியாழக்கிழமை இரவு  மின் கசிவால் திடீரென தீப்பிடித்தது. இந்தத் தீ அருகிலிருந்த  விஜயகுமாரின் பஞ்சா் கடை, ரவியின் ஏஜென்சி மற்றும் சக்திவேலின் எா்த் மூவா்ஸ் உள்ளிட்ட  கடைகளுக்கும் வேகமாக பரவியது.

இதைக் கண்ட பொதுமக்கள் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த தஞ்சாவூா் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலா்கள் தீ மேலும்  பரவாமல் அணத்தனா்.இருப்பினும்  4 கடைகளும் முற்றிலும் எரிந்து  சேதமாயின. அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து   விசாரிக்கின்றனா்.

நூறு நாள் வேலை கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்த கிராம பெண்கள்

ஓவியப் போட்டியில் வென்ற மாற்றுத்திறன் மாணவா்களுக்குப் பாராட்டு

சிங்கம்புணரியில் இன்று மின் தடை

போடி அருகே கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ஒருநாள் தொடரை வெல்லப்போவது யாா்? இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

SCROLL FOR NEXT