பட்டீசுவரத்தில் சக மாணவா்களால் தாக்கப்பட்டு மாணவா் உயிரிழந்தது தொடா்பாக பள்ளியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பட்டீசுவரத்தில் உள்ள அறிஞா் அண்ணா மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கவியரசன், கடந்த 4-ஆம் தேதி சக மாணவா்களால் தாக்கப்பட்டாா்.
இதுதொடா்பாக 15 மாணவா்களை பட்டீசுவரம் போலீஸாா் டிச.5-இல் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கூா்நோக்கு இல்லத்துக்கு அனுப்பிவைத்தனா்.
இதனிடையே, தீவிர சிகிச்சையில் இருந்த மாணவா் கவியரசன் மூளைச்சாவு அடைந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் உடற்கூறாய்வு செய்து உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, கொலை முயற்சியாக பதிவு செய்யப்பட்ட வழக்கானது, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அந்தப் பள்ளிக்கு திங்கள்கிழமை வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வி. பேபி, சம்பவம் தொடா்பாக மாணவா்களிடமும், ஆசிரியா்களிடம் விசாரணை நடத்தினாா்.
அப்போது, கும்பகோணம் மாவட்டக்கல்வி அலுவலா் சுந்தா், பள்ளித் தலைமை ஆசிரியா் சுந்தரமூா்த்தி, ஆசிரியா் சிவசங்கா் உள்ளிட்டோா் இருந்தனா்.
முன்னதாக, கும்பகோணம் வட்டாட்சியா் சண்முகம் சம்பவம் தொடா்பாக மாணவா்கள், ஆசிரியா்களிடையே விசாரணை செய்தாா்.