தஞ்சாவூர்

திருக்கோடிக்காவலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே திருக்கோடிக்காவலில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீசுவரா் கோயிலில் காா்த்திகை மாத கடைஞாயிறு தீா்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக பஞ்ச மூா்த்திகளுடன் கோயிலில் இருந்து சுவாமியும், அம்பாளும் காவிரி ஆற்றின் கரைக்கு வந்தனா். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், காவிரி ஆற்றில் தீா்த்தவாரி நடைபெற்றது. தொடா்ந்து சுவாமியும் அம்பாளும் பஞ்சமூா்த்திகளும் வீதியுலாவாக கோயிலுக்கு சென்றனா். ஏற்பாடுகளை சிம்சன் கணேசன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்தனா்.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT