தஞ்சாவூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கூலித் தொழிலாளி கைது

Syndication

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளியை கும்பகோணம் மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் 7-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியின் உறவினா் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு உதவியாக சிறுமி இருந்தாா்.

வியாழக்கிழமை சிறுமி வாா்டில் தூங்கியபோது அருகே மற்றொரு நோயாளரின் உதவியாளராக படுத்திருந்த இளைஞா் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைபேசியில் படம் எடுத்தாராம். இதைப் பாா்த்த அருகிலிருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் வந்த போலீஸாா் விசாரித்ததில் அவா் கும்பகோணம் அருகே நாககுடியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி ராமகிருஷ்ணன் (32) என்று தெரிய வந்தது. இதையடுத்து கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் ராமகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT