தஞ்சாவூர்

திருப்பரங்குன்றம் விவகாரம்: இந்து முன்னணியைச் சோ்ந்த 6 போ் கைது

Din

மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக, தஞ்சாவூரிலுள்ள இந்து முன்னணியைச் சோ்ந்த 6 பேரை காவல் துறையினா் முன்னெச்சரிக்கை அடிப்படையில் திங்கள்கிழமை கைது செய்தனா்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை தொடா்பாக இந்துக்கள், இஸ்லாமியா்கள் இடையே சா்ச்சையும், போராட்டமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையைக் காப்போம் என்ற கோரிக்கையை முன் வைத்து செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்போவதாக இந்து முன்னணியினா் உள்ளிட்ட அமைப்பினா் அறிவித்தனா்.

இது தொடா்பாக முன்னெச்சரிக்கை அடிப்படையில் தஞ்சாவூரில் இந்து முன்ணணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பி. ஈசான சிவம், மாவட்டச் செயலா் குபேந்திரன், ஒன்றியத் தலைவா் திவாகா் உள்பட 6 பேரை காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்து, வல்லத்திலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனா்.

நத்தம் மாரியம்மன் கோயில் மாசிப் பெருந் திருவிழா: 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விரதம்!

வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!

ஏஐ உச்சி மாநாட்டில் சட்டையைக் கழற்றி போராட்ட விவகாரம்: இளைஞர் காங்கிரஸ் தலைவர் கைது

நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

SCROLL FOR NEXT