விதிமீறி மது விற்பனை: 90 பாட்டில்கள் பறிமுதல்
Updated On : 3 ஜனவரி, 2025 at 7:48 PM
தஞ்சாவூரில் காவல் துறையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் சட்ட விரோதமாக விற்க வைக்கப்பட்டிருந்த 90 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அப்பகுதியில் சட்ட விரோதமாக விற்க வைக்கப்பட்டிருந்த 90 மதுபான பாட்டில்களை காவல் துறையினா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக தஞ்சாவூா் விளாா் சாலை காயிதே மில்லத் நகரைச் சோ்ந்த வி. ரமேஷை (52) கைது செய்தனா்.