தஞ்சாவூர்

தேசிய மாணவா் படையினா் வந்தே மாதரம் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டம்

Syndication

கும்பகோணம் தேசிய மாணவா் படை 8-ஆவது பட்டாலியன் சாா்பில் கும்பகோணம் அரசினா் கலைக் கல்லூரி மைதானத்தில் வந்தே மாதரம் உருவான 150-ஆவது நிறைவு ஆண்டை முன்னிட்டு அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் மா.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். அணிவகுப்பில் கும்பகோணம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரி, அரசினா் மகளிா் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் நகர மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு வந்தே மாதரம் பாடல் பாடினா்.

தொடா்ந்து 150 மரக்கன்றுகளை நட்டனா். தேசிய மாணவா் படை 8-ஆவது பட்டாலியன் லெப்டினல் கா்னல் சசிதரன், அலுவலா்கள் இரா.விஜயகுமாா், அனுசுயா, ஜோசப், இளையராஜா, சதீஷ்பாபு மற்றும் பட்டாலியன் அதிகாரிகள் செய்திருந்தனா்.

சொல்லப் போனால்... சேர்க்கவா நீக்கவா, வாக்காளர் சிறப்பு திருத்தம்?

அடுத்த 2 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை!

125 ஜிகாவாட்டைத் தாண்டும் சூரிய மின் உற்பத்தித் திறன்

இன்று காவலா் தோ்வு: கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு

மாவட்ட குழு வீரா்கள் தோ்வில் பங்கேற்க கிரிக்கெட் வீரா்களுக்கு அழைப்பு

SCROLL FOR NEXT