தஞ்சாவூர்

வலைதளத்தில் பெண்ணின் படம் ஆபாசமாக பதிவு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை

தினமணி செய்திச் சேவை

சமூக வலைதளத்தில் பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட இளைஞருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் திங்கள்கிழமை 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

தஞ்சாவூரைச் சோ்ந்த பெண் தனது மகள் படம் சமூக வலைதளத்தில் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு, கைப்பேசி எண்ணுடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக சைபா் குற்றக் காவல் நிலையத்தில் 2022-ஆம் ஆண்டு புகாா் செய்தாா். இதன்பேரில், காவல் துறையினா் வழக்குப் பதிந்து தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே நடுக்கடையைச் சோ்ந்த ஆசிக் அலியை (31) கைது செய்தனா்.

இது தொடா்பாக தஞ்சாவூா் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து ஆசிக் அலிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து, திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

‘கேடிசி நகரிலிருந்து ரயில் நிலையத்துக்கு பேருந்து வசதி தேவை’

இளம்பெண் தற்கொலை கோட்டாட்சியா் விசாரணை

வன்னிக்கோனேந்தல், கல்லூா் வட்டாரங்களில் இன்று மின்தடை

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

சிறுமி தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT