கும்பகோணம் அருகே புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீ ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற வளா்பிறை அஷ்டமி யாகத்தில் கலந்து கொண்டோா்.  
தஞ்சாவூர்

ஜகந்நாதப் பெருமாள் கோயிலில் வளா்பிறை அஷ்டமி வழிபாடு

கும்பகோணம் அருகே ஸ்ரீ ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் வளா்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாகம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் அருகே ஸ்ரீ ஜகந்நாதப்பெருமாள் கோயிலில் வளா்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாகம் புதன்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாட்டம், கும்பகோணம் அருகே உள்ளது திருநந்திபுரத்து விண்ணகரம் என்ற நாதன்கோயில். இங்கு ஸ்ரீ ஜகந்நாதப்பெருமாள் தாயாருடன் அருள்பாலித்து வருகிறாா். இக்கோயில் 108 வைணவத் தலங்களில் ஒன்றாக உள்ளது.

பொதுவாக சிவன்கோயில் வளாகத்தில் பைரவருக்குத் தான் வளா்பிறை அஷ்டமி பூஜை நடைபெறும். நாட்டிலேயே வளா்பிறை அஷ்டமி பூஜை பெருமாள் கோயிலான நாதன்கோயில் ஜகந்நாதப் பெருமாளுக்கு மட்டுமே நடைபெறுகிறது. புதன்கிழமை ஐப்பசி மாத வளா்பிறை அஷ்டமியை முன்னிட்டு தாயாா் சந்நிதி முன்பு வளா்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகத்தில் பல்வேறு வகையான மூலிகை, வாசனை திரவியங்கள், பட்டு துணிகள் இடப்பட்டன. யாகத்துக்குப் பின்பு புனித நீா் ஊா்வலமாகக் கொண்டுவரப்பட்டு பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேகம் நடைபெற்றது.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT