தஞ்சாவூர்

வேளாண் புத்தாக்கத் தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் நிதியுதவி

தஞ்சாவூா் மாவட்டத்தில் வேளாண் சாா்ந்த புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டத்தில் வேளாண் சாா்ந்த புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

வேளாண் விவசாயிகள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு புதுமையான தீா்வுகளுடன் தொடங்கும் புத்தாக்க நிறுவனங்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் மதிப்பு கூட்டுதல், வேளாண் மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களின் சேமிப்பு காலத்தை அதிகப்படுத்துதல், புதுமையான வேளாண் இயந்திரங்களை உருவாக்குதல், மற்ற புத்தாக்கத் தொழில் தொடங்குவதற்கு இத்திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்படுகிறது. நேரடியாக உண்ணும் உணவுப் பொருள்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. இத்திட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க ஒரு நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. தொழிலை விரிவுபடுத்த நிறுவனத்துக்கு ரூ. 25 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, நாஞ்சிக்கோட்டை சாலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைந்துள்ள வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) அலுவலகத்தை அணுகலாம். மேலும் 96773 31463, 98435 31097, 63748 31456 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT