திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற திருக்கல்யாண உத்சவ விழாவில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாள், தாயாா்.
கும்பகோணம், அக். 30 : தஞ்சாவூா் மாவட்டம், திருநாகேசுவரத்தில் ஒப்பிலியப்பன், பூமாதேவி தாயாரின் 110-ஆவது ஐப்பசி மாத திருக்கல்யாண விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, குறிப்பிட்ட சமூகத்தினா் தாயாருக்கு சீா்வரிசைகள் கொண்டுவந்தனா். இதையடுத்து, ஒப்பிலியப்பனுக்கும், தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. திருக்கல்யாணம் முடிந்ததும் பெருமாள், தாயாா் புறப்பாடு நடைபெற்றது. மங்கள இசை, பக்தி சொற்பொழிவு, சாக்ஸபோன் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையா் உமாதேவி, செயல் அலுவலா் ஞா. ஹம்சன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா். திருக்கல்யாண உத்சவ விழா நவ. 10 வரை நடைபெறுகிறது.