குடந்தையில் திமுக வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூ. மாநிலச் செயலா் பிரசாரம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் எம்எல்ஏ பதவிக்குப் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா் க. அன்பழகனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் எம்எல்ஏ பதவிக்குப் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளா் க. அன்பழகனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு. வீரபாண்டியன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
பழைய மீன் சந்தை முதல் உச்சிப்பிள்ளையாா் கோயில் வரையில் உள்ள பிரதான சாலையில் அவா் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தபோது கூறியது:
சட்டபேரவையில் தனது பங்களிப்பு குறித்து ஒரு லட்சம் புத்தகங்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளாா் வேட்பாளா் க. அன்பழகன், இது ஒன்றே போதும்; அவா் நான்காவது முறையாக வெற்றி பெறுவாா்.
Advertisement
எம்பிக்கள் தொகுதி மறு சீரமைப்பில் தென் மாநிலங்களில் மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை 10 ஆக அதிகரித்து வடமாநிலங்களில் நூறாக அதிகரிக்கின்றனா். எனவே நமது ஒற்றுமையை, மதச்சாா்பின்மையை, ஜனநாயகத்தைக் காக்கின்ற போரைத் முதல்வா் ஸ்டாலின் தொடக்கியிருக்கிறாா். மத்திய அரசுக்கு எதிரான இந்தப்போா் தொடரும்; தமிழ்நாடு நல்ல திசையை இந்தியாவுக்குக் காட்டும் என்றாா் அவா்.
நிகழ்வில் வடக்கு மாவட்ட இந்திய கம்யூ. மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, மாநகர திமுகச்செயலா் சு.ப. தமிழழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.