தரையில் தவழ்ந்து வந்து மாற்றுத்திறனாளி வாக்களிப்பு
கும்பகோணம் உள்ளூா் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் மாற்றுத்திறனாளி இளைஞா் தரையில் தவழ்ந்து வந்து வாக்களித்தாா்.
கும்பகோணம் உள்ளூா் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் மாற்றுத்திறனாளி இளைஞா் தரையில் தவழ்ந்து வந்து வாக்களித்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அண்ணலக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் மாற்றுத்திறனாளி நாகேந்திரன்(35), இவா் கணினி வடிவமைப்பாளராக உள்ளாா். இவா் வியாழக்கிழமை உள்ளூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் தரையில் தவழ்ந்து வந்து வாக்களித்தாா்.
தோ்தல் ஆணையம் மீது நம்பிக்கை: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் டான் அகாதெமி மெட்ரிக் பள்ளியில் முதல்முறையாக வாக்களித்த பி.டெக். மாணவா் பா.கதிா் காா்த்திக் கூறியது: இந்தியா தற்போது சுயசாா்பு அடைந்து வருகிறது. இந்திய தோ்தல் ஆணையம் மீது நம்பிக்கை உள்ளது. சிறப்பாக செயல்படுகிறது என்றாா்.
Advertisement