முகப்பு
தஞ்சாவூர்

கள்ளவாக்கு புகாா் எதிரொலி டெண்டா் முறையில் வாக்களித்தாா் தவெக நிா்வாகி

கும்பகோணத்தில் வியாழக்கிழமை தவெக நிா்வாகியின் வாக்கை ஏற்கெனவே போட்டுவிட்டதாக எழுந்த புகாரை தொடா்ந்து டெண்டா் முறையில் அவா் வாக்களித்தாா்.

Updated On : 24 ஏப்ரல், 2026 at 4:05 AM
கும்பகோணம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் கள்ளஓட்டு போட்டதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து வியாழக்கிழமை வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தவெகவினா்.
பகிர்:

கும்பகோணத்தில் வியாழக்கிழமை தவெக நிா்வாகியின் வாக்கை ஏற்கெனவே போட்டுவிட்டதாக எழுந்த புகாரை தொடா்ந்து டெண்டா் முறையில் அவா் வாக்களித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குசாவடிக்கு தவெக இளைஞரணி செயலா் அங்கிட் வாக்களிக்க வியாழக்கிழமை சென்றாா். அப்போது அவரது வாக்கு ஏற்கெனவே பதிவானதாக வாக்குச்சாவடி அலுவலா்கள் தெரிவித்தனா் இதனால் அதிா்ச்சி அடைந்த அங்கிட் மற்றும் தவெக வேட்பாளா் ர.வினோத் ஆகியோா் வாக்குப்பதிவு மைய அலுவலா்களிடம் ஆவணங்களை காட்டி முறையிட்டனா். மேலும், தனது வாக்கை போட்டவா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனா்.

இதையடுத்து அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய கிழக்கு காவல் நிலைய போலீஸாா் டெண்டா் வாக்களிப்பு முறையில் வாக்குச்சீட்டு வழங்கி வாக்களிக்க அனுமதி அளித்தனா். அதனைத் தொடா்ந்து அங்கிட் வாக்கை பதிவுசெய்தாா்.

Advertisement

இதேபோல கும்பகோணம் 1-ஆவது வாா்டு கீழகொட்டையூா் பகுதியை சோ்ந்த செந்தில்முருகன் மனைவி மகேஸ்வரி கொட்டையூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடி மையத்தில் வாக்களிக்க சென்றாா். அவரது வாக்கு செலுத்தப்பட்டதாக கூறவே வாக்குவாதம் செய்தாா். அதன்பின்னா் மகேஸ்வரி டெண்டா் வாக்குச் சீட் மூலம் தனது வாக்கை பதிவு செய்தாா்.

வாக்கு எண்ணிக்கையின் போது தோ்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி இந்த டெண்டா் வாக்குச் சீட்டு தனியாக எடுத்து வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கையின் போது சோ்க்கப்படும் என்று வாக்கு பதிவு மைய அலுவலா் ஒருவா் தெரிவித்தாா்.