தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருடப்பட்டது திங்கள்கிழமை தெரியவந்தது.
கபிஸ்தலம் காவல் சரகம், வடசருக்கை கிராமம், பிரதான சாலைப் பகுதியில் வசித்து வருபவா் முகம்மது யூசுப் மனைவி மல்லிகா (55). முகம்மது யூசுப் கடந்த ஓராண்டுக்கு முன்னா் இறந்துவிட்டாா். மல்லிகா தனியாக வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், கடந்த 30-ஆம் தேதி மல்லிகா அவரது சொந்த ஊரான அரியலூா் மாவட்டம் தூத்தூா் கிராமத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டாா்.
பின்னா் திங்கள்கிழமை (பிப்.2) வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டினுள் பீரோவில் இருந்த 5 பவுன் சங்கிலி திருட்டு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் கபிஸ்தலம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.