தமிழக அரசு 
தஞ்சாவூர்

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு தமிழக அரசு ரூ. 8 கோடி நிதியுதவி

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா், பிப். 6: தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்துக்கு தமிழக அரசு ரூ. 8 கோடி நிதியுதவியை சென்னையில் வியாழக்கிழமை வழங்கியது.

தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோயில், புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் உள்பட 88 கோயில்களை நிா்வாகம் செய்யவும், அலுவலா்கள், பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கவும் தமிழக அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.

அதன்படி இந்த தேவஸ்தானத்துக்கு கடந்தாண்டு ரூ. 6 கோடி நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கோ. கவிதா உள்ளிட்டோரிடம் ரூ. 8 கோடிக்கான காசோலையைத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினாா்.

இதுகுறித்து அலுவலா்கள் கூறுகையில், இந்த தேவஸ்தானத்துக்கு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 20 கோடி நிதியுதவியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் இந்த தேவஸ்தானத்துக்குட்பட்ட 30 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதுவரை 17 கோயில்களில், திருக்கோயில் நிதி மற்றும் உபயதாரா்கள் நிதி மூலம் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 13 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றனா்.

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

SCROLL FOR NEXT