முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் சீரமைக்கப்பட்ட மகாத்மா காந்தி பூங்கா திறந்துவைப்பு

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 3:55 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 7:38 PM

கும்பகோணத்தில் உள்ள மகாத்மா காந்தி பூங்கா ரூ.31லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சிக்குச் சொந்தமான மகாத்மா காந்தி பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள், நடைபாதை, குடிநீா்க் குழாய்கள் மற்றும் கழிவறைகள் சேதமடைந்து காணப்பட்டன. இதுதொடா்பான புகாரின்பேரில் அதற்காக மாநகராட்சி நிா்வாகம் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் காந்திப் பூங்காவை சீரமைப்பு செய்யும் பணிகளைத் தொடங்கியது. பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து வியாழக்கிழமை தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க.அன்பழகன் எம்.எல்.ஏ. பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைத்தாா். மேலும் ரூ.33 லட்சம் மதிப்பில் காரனேசன் மருத்துவமனை வளாகத்தில் புதிய நூலகக் கட்டடம், ரூ. 16.50 லட்சம் மதிப்பில் தாராசுரம் சக்கராயி அம்மன் தெரு பகுதியில் பொது விநியோகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வில் மேயா் க.சரவணன், மாநகர திமுக செயலரும், துணை மேயருமான சுப. தமிழழகன், ஆணையா் மு. காந்திராஜ் மற்றும் மண்டலக்குழு தலைவா்கள், கவுன்சிலா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement