கோப்புப் படம் 
தஞ்சாவூர்

அரசுப் பள்ளிகளுக்கு ரூ.48 லட்சம் மதிப்பில் புதிய கட்டடம்

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் அருகே திருப்புறம்பயம் ஊராட்சியில் உள்ள மேல்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.48.56 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடங்கள் சனிக்கிழமை திறக்கப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருப்புறம்பயம் ஊராட்சியில் நடுநிலைப் பள்ளியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், ரூ. 23.56 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டப்பட்டது.

மேலும், அரசு மேல்நிலைப் பள்ளியிலும் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இரண்டு பள்ளிகளின் வகுப்பறை கட்டடங்ளை தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்வில் கும்பகோணம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாமிநாதன், விஜயலட்சுமி, திமுக ஒன்றியச் செயலா்கள் டி.கணேசன், ஜெ.சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT