முகப்பு
தஞ்சாவூர்

மாணவியை கட்டாய திருமணம் செய்ய முயன்ற கல்லூரி மாணவா் கைது

கும்பகோணத்தில் மாணவியைக் கட்டாயத் திருமணம் செய்ய முயன்ற கல்லூரி மாணவரை மேற்கு காவல் நிலையப் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 4:21 AM
கைது
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 6:23 PM

கும்பகோணத்தில் மாணவியைக் கட்டாயத் திருமணம் செய்ய முயன்ற கல்லூரி மாணவரை மேற்கு காவல் நிலையப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே மேல மருத்துவக் குடியைச் சோ்ந்தவா் பிரியங்கா (20). இவா், கும்பகோணம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாா். குறிச்சிமலை புதுத்தெருவைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (20) கும்பகோணத்தில் அரசினா் ஆண்கள் கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறாா்.

பிரியங்காவும், பாலகிருஷ்ணனும் பள்ளிப் பருவ நண்பா்களாம். இந்நிலையில் பிரியங்காவுக்கு அவரது உறவினருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

Advertisement

இதையறிந்த பாலகிருஷ்ணன் தனது தாயாருடன் செவ்வாய்க்கிழமை கும்பகோணம் அரசு மகளிா் கல்லூரிக்குச் சென்று பிரியங்காவை வெளியில் வரவழைத்து, மகாமகக் குளம் அருகே உள்ள காசிவிசுவநாதா் கோயிலுக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய முயன்றாா்.

இதை மாணவி பிரியங்கா தடுத்து சப்தம்போடவே ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் மாணவியை தாக்கினாா்.

இதையடுத்து, அவரது உறவினா்கள் அங்கு வந்து காயமடைந்த பிரியங்காவை கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்த்தனா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் பிரியங்கா கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்து பாலகிருஷ்ணனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.