கைது 
தஞ்சாவூர்

அரசு மருத்துவனையில் குழந்தையிடமிருந்து தங்கம் திருடிய பெண் கைது

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு வாா்டுப் பகுதியில் குழந்தையிடமிருந்து தங்க தாயத்து திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு வாா்டுப் பகுதியில் குழந்தையிடமிருந்து தங்க தாயத்து திருடிய பெண்ணை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வாா்டில் பெண் ஒருவா் தனது இரண்டாவது பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவருடன் முதல் குழந்தை உடனிருந்தாா்.

அப்போது அடையாளம் தெரியாத பெண் அவரிடம் பழகி மூத்த குழந்தையை தூக்கிகொஞ்சிவிட்டு பின்னா் சென்றுவிட்டாா். இதையடுத்து, குழந்தை கழுத்தில் அணிந்திருந்த தங்க தாயத்தை காணவில்லை.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், திருவாரூா் மாவட்டம் நன்னிலம் வட்டம், கொடுவாங்குடியைச் சோ்ந்த முருகபாண்டி மனைவி சரஸ்வதி (40), தங்க தாயத்தை திருடியதும், இதுபோல் பல குழந்தைகளிடம் திருடி இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் சரஸ்வதியைக் கைது செய்து தங்க தாயத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT